மக்கர் செய்த வாக்குப் பதிவு எந்திரங்கள்
சென்னை:
திருச்செங்கோட்டில் ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
வைகுந்தம் என்ற பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். பலர் திரும்பிச் சென்றுவிட்டனர்.
இரண்டு மணி நேரத்துக்குப் பின் அதிகாரிகள் வேறொரு இயந்திரத்தை கொண்டு வந்து வைத்தபின்னரே மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது குறித்துஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்ட ஆட்டோக்கள் மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டது.
அதே போல திருப்பூர், காட்பாடி, கோவையிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திர கோளாறால்ஓட்டுப் பதிவு நிறுத்தப்பட்டது.
ஆரணி மற்றும் விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டியில் மின்னணு எந்திரங்களில் ஒரு கட்சிக்கு வாக்களித்தால்அது இன்னொரு கட்சிக்குப் பதிவானது. இதனையடுத்து அந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.