For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி அருகே திமுக-அதிமுகவினர் மோதல்: 9 பேர் காயம்- எம்.எல்.ஏவின் கார் உடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி மாவட்டம் இளங்காக்குறிச்சி என்ற இடத்தில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே நடந்தஅடிதடியில் அதிமுக எம்.எல்.ஏவின் கார் உடைக்கப்பட்டது. இந்த மோதலில் 9 பேர் காயமடைந்தனர்.

மருங்காபுரியில் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக திமுக மற்றும் மதிமுக தொண்டர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது மருங்காபுரி அதிமுக எம்.எல்.ஏவின் மகன் செளந்ததரராஜனும், அதிகமுவினரும் திமுக, மதிமுகவினரைஊருக்குள் விட முடியாது என்று கூறி தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து திமுகவினரும், மதிமுகவினரும் இணைந்து அதிமுகவினர் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.எம்.எல்.ஏவின் மகன் வந்த காரும் உடைத்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து அதிமுகவினர் ஓடிச் சென்று போலீசாரை அழைத்து வந்தனர். போலீசார் வந்த பிறகே திமுகவினரும்மதிமுகவினரும் தாக்குதலை நிறுத்தனர்.

இந்த சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X