அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுக்களைத் தடுத்த அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுக்கள் மறுக்கப்பட்டன.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் மூலம் தங்களது தொகுதிகளில் ஓட்டுப்போடலாம். இதற்கான சலுகையை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆனால், தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதலில் குழப்பமானஉத்தரவுகள் தமிழக அரசால் தரப்பட்டன. ஒரே ஊழியருக்கு இரண்டு ஊர்களில் தேர்தல் பணிகள் தரப்பட்டன.இதனால் பெரும் குழப்பம் நிலவியது.

இந்த சிக்கல் தீர்க்கப்பட்டு கடைசி நேரத்தில் தான் அவர்களுக்கு உரிய வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்பட்டன.ஆனால், அந்த வாக்குச் சாவடிகளில் இருந்து தபால் மூலம் தங்களது வாக்கை செலுத்தும் வசதியை தமிழக அரசுசெய்து தரவில்லை.

இதனால் மாநிலம் முழுவதிலும் தேர்தல் பணியில் உள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களால் தபால் ஓட்டுக்கள்போட முடியவில்லை.

கடந்த ஆண்டு -ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும்ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் மன நிலையில் இருந்தனர். இதனால் அவர்களைவாக்களிக்க விடாமல் அரசு தடுத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+