ராமதாஸ் வாக்களிப்பு: நாற்பதிலும் வெற்றி என்கிறார்
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் இன்று காலை தனது மனைவிசரஸ்வதி, மகன் டாக்டர் அன்புமணி, மருமகள் செளமியா, தாயார் சுப்புலட்சுமி ஆகியோருடன் வாக்களித்தார்.
பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற பா.ஜ.கவின் கனவு பலிக்காது. தமிழகம்- மற்றும் புதுவையில் உள்ள 40தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 230முதல் 250 தொகுதிகள் வரை கிடைக்கும்.
நான் ஓட்டுப் போடுவதை பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதில் இருந்தேதமிழகத்தில் ஜனநாயகம் இறந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு விரைவில் முடிவு கட்டப் படும் என்றுகூறினார்.
இந்து ராம்:
இந் நிலையில் இந்து பத்தரிக்கை ஆசிரியர் என்.ராம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கைப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதாவுக்குஎதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது. அந்த அலையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும்என்றார்.
ப.சிதம்பரம்:
அதேபோல், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் காரைக்கடி பக்கம் உள்ள கண்டருலூரில்வாக்களித்தார். வாக்களித்த பின் நிருபர்களிடம் பேசுகையில்,
ஜெயலலிதாவுக்கு எதிரான கடும் அலை வீசிக்கொண்டிருக்கிறது. அந்த அலை காரணமாக அதிமுக கூட்டணிக்கு எதிராக பெருமளவில் வாக்குகள்பதிவாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன என்று கூறினார்.












Click it and Unblock the Notifications