வாக்காளர் பட்டியலில் முஸ்லீம்கள், அரசு ஊழியர்கள் பெயர்கள் நீக்கம்: ஜெ மீது திமுக புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர் பட்டியலிலிருந்து ஏராளமானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவே காரணம் என்று திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது அதிகாரிகளை வைத்து திமுக கூட்டணிக்கு சாதகமான தொகுதிகளில்ஏராளமான வாக்காளர்களின் பெயர்களை நீக்கி விட்டு, இப்போது தேர்தல் ஆணையத்தை ஜெயலலிதா புகார் கூறுகிறார்.
இதை திமுக வன்மையாக கண்டிக்கிறது. நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் கொடுத்தது. ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications