For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 30 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு

By Staff
Google Oneindia Tamil News

செனனை:

தமிழகத்தில் 30 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

19 இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாலும், 11 இடங்களில் பட்டியில் இருந்து நீக்கப்பட்டவாக்காளர்களை தேர்தல் அதிகாரிகள் வாக்களிக்க அனுமதித்தாலும் இந்த மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறு வாக்குப் பதிவு நடத்தப்படும். வாக்குப் பதிவின்போது வாக்காளரின்ஆள்காட்டி விரலுக்குப் பதிலாக நடுவிரலில் மை வைக்கப்படும்.

மாநிலத்தில் சரியாக 60.56 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மொத்தமுள்ள4,72,55,649 வாக்காளர்களில் 2,86,17,420 பேர் வாக்களித்துள்ளனர்.

தமிழகத்திலேயே அதிக அளவாக நாகப்பட்டிணத்தில் தான் 71.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வட சென்னையில் தான்மிகக் குறைந்த அளவாக 46.15 சதவீத வாக்குகள் பதிவாயின.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X