For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியகுளம், சிதம்பரம் தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை & டெல்லி:

பெரியகுளம் தொகுதியில் நடந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு, மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றுதேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி மனு கொடுத்துள்ளது.

அதேபோல் சிதம்பரம் (தனி) தொகுதிக்குட்பட்ட 8 தலித் கிராமங்களில் முழுமையாக மறு வாக்குப் பதிவு நடத்தவேண்டும் என்று தலித் விடுதலைக்கான மனித உரிமைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிதம்பரம் தொகுதியில் தேர்தலைப் பார்வையிட்ட இந்த அமைப்பு, சிதம்பரம் தொகுதியில் தலித் மக்கள்முழுமையான அளவுக்கு வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்படவில்லை. பல கிராமங்களில் தலித் மக்கள்வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டப்பட்டுள்ளார்கள்.

பல பகுதிகளில் குறிப்பிட்ட கட்சிக்காக மட்டுமே ஓட்டுப் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.மொத்தமாக 8 கிராமங்களைச் சேர்ந்த தலித் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.

13 வாக்குச் சாவடிகளிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளரின் முகவர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாகவெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே சிதம்பரம் தொகுதியில் 8 கிராமங்களில் முழுமையாக மறு வாக்குப் பதிவுநடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

இந் நிலையில், அகில் இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் டெல்லியில் தலைமைதேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில்,

அதிமுக வேட்பாளர் தினகரன் போட்டியிட்ட பெரியகுளம் தொகுதியில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன.வேட்பாளரும் அரசும் விதிகளை மீறி பல முறைகேடுகளைச் செய்துள்ளனர்.

எனவே, அங்கு நடந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X