இலங்கை: மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையை எப்போதுதொடங்குவது என்பது குறித்து முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில், நார்வேகுழு இன்று நாடு திரும்பியது.

இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்த நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் மற்றும் வெளியுறவுத் துறைஇணை அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் ஆகியோர் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து இருவரும் இன்று நார்வேதிரும்பினர். முன்னதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

அமைதிப் பேச்சுவார்த்தையில் நார்வே தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று இரு தரப்பும் வேண்டுகோள் விடுத்தன.

பேச்சுவார்த்தையை எங்கு நடத்துவது, பேச்சுவார்த்தையின் அம்சங்கள் குறித்து இலங்கை அரசுக்கும், புலிகள் இயக்கத்துக்கும்இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கு முன்பு நடந்த 6 கட்ட பேச்சுவார்த்தையைப் போலவே, இனி மேற்கொள்ளவிருக்கும்பேச்சுவார்த்தையையும் வெளிநாடுகளில் நடத்த புலிகள் இயக்கம் விரும்புகிறது.

ஆனால், இலங்கைக்குள்ளேயே பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என சந்திரிகா அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து உடன்பாடு ஏற்பட்ட பிறகே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடியும்.

வரும் வாரங்களில் இலங்கை அரசுடனும், புலிகளுடனும் நார்வே தொடர்ந்து ஆலோசனை நடத்தும் என்று தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+