இன்று மாலை பிளஸ் டூ முடிவுகள் வெளியீடு
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
கடந்த மாதம் பிளஸ் டூ தேர்வுகள் நடந்தன. ஐந்தரை லட்சம் மாணவ, மாணவியர் இதை எழுதினர். இதன் முடிவுகள்இன்று மாலை வெளியிடப்படுகிறது.
சென்னையில் உள்ள தேர்வுகள் இயக்குநரகத்தில் இன்று மாலை வெளியாகும் தேர்வு முடிவுகளை இணையதளங்களிலும் வெளியிட தேர்வுகள் துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதுதவிர செல்போன்களில்எஸ்.எம்.எஸ்.வசதி மூலம் முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான உடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று அங்கு மதிப்பெண்களை மாணவ,மாணவியர் அறிந்து கொள்ள முடியும்.
கீழ்க்கண்ட இணைய தளங்களில் முடிவுகளைக் காணலாம்:
செல்போன் எஸ்.எம்.எஸ். வசதி மூலம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
BSNL/Hutch/BPL - 1044.
Aircel - 5555.
Cellone - 444.
தேர்வு முடிவுகளை வரும் திங்கட்கிழமைக்குள் வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால்,மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிட முதல்வர்ஜெயலலிதாவும், கல்வி அமைச்சரும் ஒப்பதல் அளித்தனர். இதனையடுத்து இன்று மாலை தேர்வு முடிவுகள்வெளியிடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications