For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மீது புகார்: திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்கிறது பாஜக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்ததற்கு ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்ததே காரணம் என்றுமுன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவையில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டிஅளித்தார்.

அவர் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது அதிமுக அரசை கலைக்கச் சொல்லி நிர்பந்தித்தது திமுக. அதைஏற்காததால் தான் விலகினார்கள். இப்போது வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் ஜெயலலிதா அரசைக் கலைக்கச்சொல்லி ராமதாஸ் மூலமாக தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்காக உழைத்த தொண்டர்கள், ரஜினி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுகவும், பாஜகவும் சேர்ந்துதான் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை சந்தித்தன. எனவே இப்போது கிடைத்துள்ளதோல்விக்கு இரு கட்சிகளுமேதான் காரணம். ஒரு கட்சியை மட்டுமே குறை சொல்ல முடியாது.

மத்தியில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பியதால்தான் படுதோல்வி கிடைத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதும்சரியல்ல, அது கூட்டணி தர்மமும் அல்ல.

அதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததால்தான் படுதோல்வி கிடைத்துள்ளதாக புகார் கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்போம். விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ததற்குநன்றி தெரிவிப்பேன். அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றார்.

இதனால் தமிழக பா.ஜ.கவில் விரைவில் மோதல் வெடிக்கலாம் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X