எம்.எஸ்.சுப்புலட்சுமி மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
பிரபல கர்நாடக இசைப் பாடகி பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்.எஸ். என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகியானஎம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும் நேற்று உடல் நடுக்கமும், வாந்தியும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள்அளிக்கப்பட்டு வருகின்றன.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருப்பதாகவும்மருத்துவர்கள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர்.
உடல் நிலை குறித்து இனி கவலைப்பட ஏதுமில்லை என்றும், அவரது வயது தான் எங்களுக்கு கொஞ்சம் கவலை தருகிறதுஎன்றும் டாக்டர்கள் கூறினர். சுப்புலட்சுமிக்கு வயது 87 ஆகும்.