எந்த பட்டனை அழுத்தினாலும் சூரியன்.. இலைக்கே வாக்கு: மக்கள் கூட்டணி புகார்
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் நேர்ந்த குளறுபடிகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும்என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும், மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பனும்கூறினர்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் கூறியதாவது:
தென்காசி, ராமநாதபுரம் தொகுதியில் எந்த பட்டனை அழுத்தினாலும் அது உதயசூரியன், இரட்டை இலைசின்னங்களிலேயே பதிவானது.
ராமநாதபுரம் சத்திரக்குடி கிராமத்தில் எங்களுக்கு 1,000 வாக்குகள் உள்ளன. ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது 10 வாக்குகள்தான் பதிவானது தெரிய வந்தது.
அதிகாரிகளின் துணையோடு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே தென்காசி, ராமநாதபுரம் தொகுதிகளில்மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும். முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் நேர்ந்த குளறுபடிகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு தவறுசெய்திருந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கலாமே?
மக்கள் கூட்டணிக்கு 10 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் எங்களை தமிழக அரசியலில் இருந்துநீக்க முயன்றவர்களின் எண்ணம் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications