கருணாநிதி, சுர்ஜித், லாலுவுடன் சோனியா சந்திப்பு
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிசன்சிங் சுர்ஜித், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ்ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
மன்மோகன் பிரதமராக்க ஆதரவளிக்குமாறு அவர்களிடம் சோனியா கேட்டுக் கொண்டார்.
சோனியா பிரதமராகவே மக்கள் வாக்களித்துள்ளதாகக் கூறிய கருணாநிதி, சோனியா எடுக்கும் எந்தமுடிவையும் ஆதரிப்பதாகவும் உறுதிமொழி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இச் சந்திப்பின்போதுகாங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்துக்கும் உடனிருந்தார்.
அப்போது அமைச்சரவையில் திமுக சேர வேண்டும் என சோனியா மீண்டும் வலியுறுத்தினார்.
மன்மோகன் சிங்கை பிரதமராக ஏற்பதில் இடதுசாரிக் கட்சிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனசோனியாவிடம் சுர்ஜித் தெரிவித்துள்ளார். அதே போல சோனியா சொல்லும் யாரையும் பிரதமராகஏற்கத் தயார் என்று அறிவித்துள்ளார்.
சோனியாவுடனான சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய லாலு, பதவியை விட்டுத் தந்தசோனியாவின் பெருந்தன்மையைக் கண்டு வியக்கிறேன். இதமூலம் வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ்.ஆகியோரின் வாய்களை அடைத்துள்ளோம். இனி மக்களிடம் இவர்கள் எந்த முகத்தோடு போய்நிற்பார்கள் என்று தெரியவில்லை என்றார்.
அதே போல பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனும் சோனியா பேசி வருகிறார்.
சோனியாவின் கோரிக்கையை அனைத்துக் கட்சிகளும் ஏற்கும் என்றே தெரிகிறது. கூட்டணியில்இல்லாத சமாஜ்வாடி கட்சியும் சிங்கை பிரதமராக ஏற்க முன்வந்துள்ளது.
இந் நிலையில் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தை மன்மோகன் சிங்கும் தனியே சந்தித்து ஆலோசனைநடத்தினார்.