ஊட்டி மலை ரயில் மீண்டும் ஓடத் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்:
கடந்த 15 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக உதகை மலைப் பாதையில்20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் நிறுத்தப்பட்டது.
இந் நிலையில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் மண் சரிவை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு மலை ரயில்பாதை சீர் செய்யப்பட்டது.
இதையடுத்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் மலை ரயில் இயக்கப்படுகிறது.மேட்டுப்பாளையத்திலிருந்து கிளம்பிய இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குதூகலத்துடன்பயணித்தனர்.












Click it and Unblock the Notifications