பாமகவினரின் ரஜினி கொடும்பாவி எரிப்பு தொடர்கிறது
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நடிகர் ரஜினிகாந்த்தின் கொடும்பாவியை பா.ம.க. தொண்டர்கள் தீவைத்து எரித்ததால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அக்கட்சிக்கு எதிராக தனது ரசிகர்களை ஈடுபடுத்தினார் நடிகர்ரஜினிகாந்த். மேலும் டாக்டர் ராமதாஸை கடுமையாகவும் அவர் விமர்சித்தார்.
ஆனால் மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பா.ம.க. போட்டியிட்ட 6 தொகுதிகளிலும்மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் பா.ம.கவினர், ரஜினி ரசிகர்களுக்கு எதிரான நடவடிக்கையில்இறங்கியுள்ளனர்.
வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரஜினி ரசிகர்களை பா.ம.கவினர் தாக்கியுள்ளனர். மேலும் ரஜினியின்கொடும்பாவியையும் எரித்து வருகிறார்கள்.
இந் நிலையில் மயிலாடுதுறையில் ரஜினியின் கொடும்பாவியை பா.ம.கவினர் எரித்தனர். மணிக்கூண்டு, கிடப்பாஅங்காடி எதிரே நடந்த இந்த கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் ஏராளமான பா.ம.கவினர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை.
ரஜினி கொடும்பாவி எரிப்பால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications