அதிமுகவில் வருகிறது அதிரடி மாற்றம்
சென்னை:
மக்களவைத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளதால், அதிமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்களைச் செய்யமுதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்வியிலிருந்து இன்னும் ஜெயலலிதா மீளவில்லை. தோல்வி கொடுத்த பாடத்தால் பலஅதிரடி வாபஸ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், கட்சியில் களையெடுப்பைத் தொடங்கவுள்ளார்.
கட்சி அளவில் மட்டுமல்லாமல் அமைச்சரவையிலும் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட கடுமையான அதிருப்தியை அதிமுகவினர்சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என ஜெயலலிதா நினைக்கிறார். கட்சிக்குள் பரம விரோதிகளாக இருக்கும்பல காங்கிரஸார், மக்களவைத தேர்தலின்போது மிகுந்த ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டனர்.
ஆனால் அதிமுக சார்பில் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், அமைச்சர்கள்காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியை சரிவர பயன்படுத்தி ஓட்டுக்களை சிதறடிக்கவில்லை.
மேலும் அதிமுக வேட்பாளருக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று ஜெயலலிதா காதுகளுக்கு செய்திபோயுள்ளது. இதனால்தான் சில தொகுதிகளில் தோற்கக் கூடும் என்று கருதப்பட்ட காங்கிரஸ் கட்சி போட்டியிட்டஅத்தனை இடங்களிலும் வென்று விட்டதாக ஜெயலலிதாவுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்செங்கோடு, கோபிச்செட்டிப்பாளையம், ராசிபுரம், சேலம் ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளர்கள்மீது ஜெயலலிதா கடும் அதிருப்தியில் உள்ளார். இவை எல்லாம் அதிமுகவின் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கட்சி அளவிலும், அமைச்சரவை அளவிலும் ஜெயலலிதா பெரும் மாற்றத்தை செய்யவுள்ளார்என்பதுதான் கோட்டை வட்டாரத்திலும், அதிமுக வட்டாரத்திலும் இப்போதைய பேச்சாக உள்ளது.












Click it and Unblock the Notifications