சென்னையில் 5 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட மாநகராட்சி முடிவு
சென்னை:
சென்னையில் 5 இடங்களில் புதிய பாலங்கள் கட்டவும், ஓரிடத்தில் சுரங்கப் பாதை அமைக்கவும்மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
வில்லிவாக்கம், ரெங்கராஜபும், கத்திவாக்கம், மணியக்கார சத்திரம் ஆகிய பகுதிகளில் ரயில்வேகேட்டுகளால் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனையை சமாளிக்க அங்கு பாலங்கள்கட்டப்படவுள்ளன.
இப் பகுதிகளில் ரயில்கள் வரும்போதெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பயணிகள் பெரும்சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். வில்லிவாக்கம் ரயில்வே கேட்டுக்கு மேல் ரூ. 13.96 கோடிசெலவில் பாலம் கட்டப்படவுள்ளது.
கத்திவாக்கம் பாலத்துக்கு ரூ. 7.10 கோடி ஒதுக்கப்படவுள்ளது. ரெங்கராஜபுரத்தில் பாலம் கட்ட ரூ.12 கோடி செலவிடப்படவுள்ளது.
மணியக்கார சத்திரத் தெருவில் ரயில் தண்டவாளத்தின் கீழே ரூ. 9.25 கோடி செலவில் சுரங்கப் பாதைஅமைக்கப்படவுள்ளது.
இந்தச் செலவுகளில் பாதியை ரயில்வே துறை ஏற்கும்.
அதே போல விருகம்பாக்கத்தில் பாரி தெருவில் கால்வாய்க்குக் குறுக்கே பாலம் அமைக்க ரூ. 1கோடி ஒதுக்கப்படவுள்ளது.
இந்திராநதர்- தரமணி சாலை சந்திப்பில் பங்கிங்காம் கால்வாய்க்குக் குறுக்கே ரூ. 1.62 கோடியில்பாலம் கட்டப்படவுள்ளது.