பிளாட்பாரத்தில் ஓடிய வேன்: தூங்கிக் கொண்டிருந்த தாய், மகள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிய குடிசைப் பகுதி பெண்கள் மீது வேன் ஏறியது.இதில் தாயும் மகளும் பலியாயினர்.
சிந்தாதிரிப் பேட்டை கூவம் ஆற்றோரக் குடிசையில் வசிப்போர் பிளாட்பாரத்தில் படுத்துஉறங்குவது வழக்கம்.
அதிகாலை 3 மணியளவில் இப் பகுதியில் உள்ள ஐஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தவேன் தாறுமாறாக ஓடி, பிளாட்பாரத்தில் ஏறியது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஏகவள்ளி (60),அவரது மகள் முருகம்மாள் (19) ஆகியோர் மீது ஏறி இறங்கியது.
இதில் அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சில பெண்களும்காயமடைந்தனர். கட்டுப்பாடில்லாமல் ஓடிய அந்த வேன் குடிசைக்குள்ளும் புகுந்தது. இதில் 3 வயதுசிறுமியும் காயமடைந்தாள்.
வேனை படுவேகத்தில் ஓட்டிய டிரைவர் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications