ஆற்காடு, துரைமுருகன், ஸ்டாலின் டெல்லி விரைவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முதன்மைச் செயலர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றியது. இதனையடுத்து மத்தியில்காங்கிரஸ் தலைமையில் புதிய அரசை அமைக்க கருணாநிதி டெல்லி சென்றார். அங்கு சென்ற பின்னரேஅமைச்சரவையில் பங்கேற்பது என்ற முடிவுக்கு திமுக வந்துள்ளது.அமைச்சரவையில் சேர்க்குமாறு 6 பெயர்களையும் பரிந்துரைத்துள்ளார் கருணாநிதி. இந் நிலையில்இவ் விஷயம் குறித்து மேலும் விவாதித்து முடிவெடுக்க, கருணாநிதி அழைத்ததால், ஆற்காடு வீராசாமி,துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications