ராஜிவ் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி: ஜெ. புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி கடைபிடிக்கப்படும் கொடுஞ்செயல்எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார்.
கோட்டை வளாகத்தில் உறுதிமொழியை முதல்வர் படிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள், தலைமைச்செயலக ஊழியர்கள் திருப்பிச் சொல்வார்கள். இவ்வாறு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கும்.
இன்று சென்னையில் இருந்தாலும் ஜெயலலிதா கோட்டை வரவில்லை. இதனால் ஜெயலலிதாவுக்குப்பதிலாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியைப் படித்தார்.
ராஜிவின் படத்துக்கும் மலர் தூவினார். பன்னீர்செல்வம் உறுதிமொழியை படித்தபோது அதை பிறஅமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் திரும்பக் கூறினர். ஆனால், அமைச்சர் பொன்னையன்மட்டும் அமைதியாக நின்றிருந்தார்.












Click it and Unblock the Notifications