கர்நாடக விவசாயிகள் தமிழகம் வருகை
சென்னை:
தமிழக, கர்நாடக மாநில காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் இணைந்து உருவாக்கியுள்ள காவிரிக் குழுவில்இடம் பெற்றுள்ள கர்நாடக விவசாயிகள், வரும் ஜூன் 11 மற்றும் 12 தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம்மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காவிரிக்குடும்பம் என்ற பெயரில் இந்தக் குழுவை அமைத்துள்ளனர். இந்தக் குழுவில் இரு மாநில விவசாயிகளும்இடம்பெற்றுள்ளனர்.அவ்வப்போது இரு மாநில விவசாயிகளும் காவிரிப் பாசனப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்துவருகின்றனர்.
இந் நிலையில் இக் குழுவைச் சேர்ந்த விவசாயிகள், 11ம் தேதி திருச்சி வருகின்றனர். தமிழக காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகளுடன் வறட்சி நிலை குறித்து ஆலோசிக்கிறார்கள். பின்னர் விவசாயிகள் குழு மேட்டூர் அணையைப்பார்வையிடுகிறது.
கடந்த முறை கர்நாடக விவசாயிகள் தமிழகம் வந்தபோது தஞ்சாவூர், நாகப்பட்டனம் ஆகிய பகுதிகளைப்பார்வையிட்டனர். இரு தரப்பு விவசாயிகளும் இதுபோல சந்தித்துப் பேசுவது இது நான்காவது முறையாகும்என்பது குறிப்பிடத்தக்கது.