எம்சிஏ தேர்வு எழுதும் ராஜீவ் கொலை கைதி நளினி
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருக்கும் நளினி எம்.சி.ஏ தேர்வு எழுதஇருக்கிறார்.
இந்தக் கொலை வழக்கில் ஸ்ரீகரன் (நளினியின் கணவர்), பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஷ், ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 7 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் இருந்தபடியே 7 பேரும் படித்துவருகிறார்கள். நளினி, இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ படித்து வருகிறார். ஏற்கனவே 3செமஸ்டர் எழுதிய அவர் இப்போது 4 வது செமஸ்டர் தேர்வை எழுத உள்ளார்.
நளியின் தணவர் ஸ்ரீகரன் சிறையில் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வருகிறார். ராபர்ட், ராமச்சந்திரன் ஆகியோர்மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வரலாற்று பாடத்தில் முதுகலை பட்டப் படிப்பு படிக்கிறார்கள்.
நளினி-ஸ்ரீகரன் தம்பதிகளுக்கு பிறந்த ஸ்ரீனிக்கு தற்போது 12 வயது ஆகிறது. அவர் கொழும்பில் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications