திருட்டு விசிடியை எதிர்த்து நாளை தமிழ் திரையுலகம் உண்ணாவிரதம்
சென்னை:
திருட்டு விசிடியை முற்றிலும் ஒழிக்கக் கோரி தமிழ் திரைப்பட பாதுகாப்புக் கழகம் சார்பில் நாளை சென்னையில்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கழகத்தின் தலைவர் கே.ராஜன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், திருட்டு விசிடிதயாரிப்பாளர்களால் தமிழ்த் திரையுலகம் நசிந்துவிட்டது. திருட்டு விசிடி தயாரிப்பாளர்களை குண்டர் சட்டத்தில்கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருட்டு விசிடியைக் கண்டித்து தமிழ் திரைப்பட பாதுகாப்புக் கழகம் சார்பில் 24ம் தேதி சனிக்கிழமை திரைப்படவர்த்தக சபை வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
போராட்டத்தை நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தொடங்கி வைக்கிறார். இதில் திரைப்படத் தயாரிப்பாளர்கள்,விநியோகஸ்தர்கள், நடிகர்கள், நடிகையர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கிறார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications