தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கையில் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை சிறைச் சாலைகளில் வாடி வரும் தமிழக மீனவர்களை மீட்கும் பொருட்டு தலைநகர் கொழும்புவில் வரும்27,28 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22மீனவர்கள் அடங்கிய குழு இலங்கை சென்றுள்ளது.

தமிழகத்தின் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டனம், நாகப்பட்டனம் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவருகிறார்கள்.

இலங்கை கடற்படையினரால் சுடப்படுவது, இலங்கை மீனவர்களால் கடத்தப்படுவது என தொடர்ந்துவிரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலையாவதற்கான அறிகுறியே இல்லை.

இந் நிலையில் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர முடிவு காணும் வகையிலும், இலங்கைசிறையில் அடைபட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை தலைநகர் கொழும்புவில் வரும் 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தேவதாஸ், அருள், ஞானசீலன், அருளானந்தம்,வின்சென்ட் மற்றும் புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் அடங்கிய மீனவர்குழு சனிக்கிழமை திருச்சி வழியாக கொழும்பு புறப்பட்டுச் சென்றுள்ளது.

கொழும்பு நகரில் தமிழக மீனவர் குழுவுக்கும், இலங்கை மீனவர் குழுக்களுக்கும் இடையே நடைபெறவுள்ளபேச்சுவார்த்தையில், இந்திய, இலங்கை தூதரக அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+