புதிய பாதுகாப்பு ஆலோசகராக ஜே.என். தீக்ஷித் நியமனம்
டெல்லி:
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டார். அந்தப் பதவியில் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜே.என்.தீக்ஷித்நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஜ்பாயின் ஆட்சியில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார் மிஸ்ரா. ஆட்சி மாற்றத்தையடுத்துதனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து அந்தப் பதவியில் தீட்சித்நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிவ் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு அமைதி காக்கும் படையை அனுப்பச் செய்தது தீக்ஷித்தான் என்பது நினைவுகூறத்தக்கது. பாகிஸ்தான், இலங்கையில் இந்தியத் தூதராகவும்பணியாற்றியுள்ளார் தீக்ஷித்.
அதே போல மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து சோலி சொராப்ஜியும் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுவிட்டார்.
காஷ்மீரில் பல்வேறு அமைப்புகளுடன் அமைதிப் பேச்சு நடத்தி வந்த மத்திய அரசின சிறப்புப்பிரதிநிதி என்.என்.வோராவும் ஆட்சி மாற்றத்தையடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஆனால், அவரது ராஜினாமாவை மன்மோகன் சிங் இதுவரை ஏற்கவில்லை.












Click it and Unblock the Notifications