தமிழக காங்கிரசுக்கு இன்னொரு அமைச்சர் பதவி தரலாம்: கருணாநிதி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த முயற்சி எடுக்கப்படும் என திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயலலிதா மீதான வழக்குகளின் விசாரணையில் தாமதம் இல்லாதுபார்த்துக் கொள்வோம். சட்டம் தனது கடமையைச் செய்யும்.
மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சியைக் கொண்டு வருவேத என் முக்கிய லட்சியம். அதற்கான நடவடிக்கைகளைதுரிதப்படுத்துவோம்.
தமிழகத்திற்கு மேலும் சில அமைச்சர்கள் தேவை, அது காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட வேண்டும். தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவரும் அமைச்சராக இல்லை. காங்கிரசை சேர்ந்த தென் மாவட்ட எம்.பி யாராவதுஅமைச்சரானால் மகிழ்வேன்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு விரைவில் அறிவிக்கப்படும். இந்தக்குழு, தமிழக நலன் குறித்த பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும்.
அதேபோல, மத்திய அரசின் செயல்பாடுகளையும் இந்தக் குழு கண்காணித்து வரும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications