தென் மாவட்டங்களை புறக்கணிக்கும் திமுக: கிருஷ்ணசாமி
சென்னை:
தென் மாவட்டத்தைச் சேர்ந்த எந்த எம்.பிக்கும் அமைச்சர் பதவி வாங்கித் தராமல் அந்த மாவட்டங்களை திமுகசுத்தமாகப் புறக்கணித்து விட்டது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவுக்கு பதவி ஆசை வந்து விட்டது. எதில் வருமானம் வரும்என்பதை குறி வைத்து அந்த இலாகாவை கேட்கிறார்கள். சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குஇல்லை.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி கிடைக்காதது வேதனையாக உள்ளது. தென்மாவட்டங்களை திமுக முற்றிலும் புறக்கணித்து விட்டது.
அமைச்சரவை தூய்மையானவர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி விரும்புகிறார்.ஆனால், தகுதியே இல்லாமல் சிலர் அமைச்சராகியுள்ளனர்.
ஜூன் மாதம் 3வது வாரத்தில் ஊட்டியில் மக்கள் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில்ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதிஷ் குமார், சரத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றார் கிருஷ்ணசாமி.-