மதுரை கமிஷ்னராக விஜயக்குமார் மீண்டும் நியமனம்: தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டவர்
சென்னை:
தேர்தல் விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட மதுரை காவல்துறை ஆணையர்விஜயக்குமார் மற்றும் சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் ஆகிய இருவரும் மீண்டும்அதே பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்தது.
மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவினரின் தேர்தல் விதிமீறல்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததாக புகார்கூறப்பட்ட மதுரை காவல்துறை ஆணையர் விஜயக்குமாரும், மயிலாப்பூர் துணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன்ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
நேற்று முன் தினம் வரை தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்தன. இதனால் மாநில அதிகாரிகள் தேர்தல்ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தனர். இப்போது தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வந்துவிட்டதால், மீண்டும்மாநில அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் வந்துள்ளனர்.
இதையடுத்து இந்த இரு அதிகாரிகளையும் மீண்டும் அதே பொறுப்புகளில் நியமித்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
தற்போது மதுரை ஆணையராக இருந்து வரும் ஆபாஷ்குமார் தலைமையக டிஐஜியாக சென்னைக்குமாற்றப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்து வரும் உதவி ஐஜி கருணாசாகர், டிஜிபி அலுவலகத்திற்கு மீண்டும்மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications