எஸ்.எஸ்.எல்.சி: பெயில் ஆவதில் "சென்டம்" அடித்த பள்ளி
ராமநாதபுரம்:
தேர்ச்சி பெறுவதில் பல பள்ளிகள் "சென்டம்" அடிப்பது வழக்கம். ஆனால் தோல்வியுறுவதில் 100 சதவீதத்தைத்தொட்டு ராமநாதபுரம் மாவட்டம் பம்மனேந்தல் அரசு மேல் நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது பம்மனேந்தல் அரசு மேல் நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியிலிருந்துபத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
இது ராமநாதபுரம் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பம்மனேந்தல் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பரமக்குடிவட்டார கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்தப் பள்ளி ஆசியர்களின் போதனை முறை சரியில்லை என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்குகாரணமாகவும் தான் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என இப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications