பயங்கர தீ விபத்து: மதுரை காதி பவன் கருகியது
மதுரை:
மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள காதி பவன் விற்பனையகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அதில் இருந்தபல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
ராணி மங்கம்மாள் சத்திர வளாகத்தில் உள்ளது இந்த காதி பவன். நேற்றிரவு கடையைப் பூட்டிவிட்டு ஊழியர்கள்அனைவரும் சென்று விட்ட பிறகு இரவு 10 மணி வாக்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
கொளுந்து விட்டு எரியத் தொடங்கிய தீயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 2 மணி நேரம் 6தீயணைப்பு வண்டிகளும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும், போலீஸாரும் சேர்ந்து போரடித்தான் தான் தீயைஅணைக்க முடிந்தது.
இந்தத் தீயில் பல லட்சம் காதி பொருட்கள், சிலைகள், செருப்புகள், சிலைகள், முத்து, பவளம் போன்ற பொருட்கள்எரிந்து போயின.
கடையே முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டது.












Click it and Unblock the Notifications