பாதுகாப்பு ஆலோசகராக தீக்ஷித்: வருந்தவில்லை - வைகோ
சென்னை:
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக ஜே.என். தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளது தனக்கு மன வருத்தம்எதையும் தரவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ராஜிவ் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த தீக்ஷித் தான்இலங்கைக்கு அமைதி காக்கும் படையை அனுப்பச் செய்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
இலங்கை விவகாரத்தில் ராஜிவை இவர் தவறாக வழிகாட்டியதாக தமிழ் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்கள் புகார் கூறியதுண்டு.
இந் நிலையில் இவர் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கட்டுள்ளதால் வைகோ அதிருப்திஅடைந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.
இதை மறுத்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் கெளரவத்துடனும், அமைதியாகவும் வாழும் வகையில், அங்குஅமைதியை ஏற்படுத்த நார்வே உதவியுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின்பங்களிப்பும் இருக்க வேண்டும்.
இதை பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடமும் நேரில்சந்தித்து வலியுறுத்தினேன். மனுவும் கொடுத்தேன்.
இந் நிலையில் ஜே.என். தீக்ஷித் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் எனக்கு மன வருத்தம்ஏதுமில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். எதிர்காலத்தை நம்பிக்கையுடன்எதிர்கொள்வோம்.இலங்கையில் தமிழர்களுக்கு புதுவாழ்வு மலர உதவுவோம்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கவும், சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக அமலாக்கவும்பொது செயல் திட்டத்தில் மத்திய அரசு உறுதிமொழி அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறதுஎன்று கூறியுள்ளார் வைகோ.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications