For Daily Alerts
Just In
45 நாள் மீன் பிடி தடை நீங்கியது
சென்னை:
தமிழக கடல்களில் கடந்த 45 நாட்கள் நீடித்து வந்த மீன் பிடிக்கான தடை நேற்று நள்ளிரவு முதல் நீங்கியது.இதையடுத்து இன்று அதிகாலை முதல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
மீன்கள் குஞ்சு பொரிக்கும் காலத்தில் கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதிக்கும். அந்த வகையில் கடந்த 45நாட்களாக மீன் பிடிக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் மீனவர்கள் யாரும் கடலில் மீன் பிடிக்கப்போகவில்லை.
இந் நிலையில், இந்தத் தடை நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலைமுதல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தொடங்கியுள்ளனர்.
45 நாட்களாக மீன் பிடிக்காத காரணத்தால், கடலில் ஏராளமான மீன்கள் இருக்கும் என்று மீனவர்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, May 30, 2004, 5:30 [IST]