For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர் விடுதலை படை தொண்டர்கள் 6 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசன் கைதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தைச் சேர்ந்த மேலும் 6 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசன் கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்தஇயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்களையும் பிடிக்க போலீஸார் தீவீர வேட்டை நடத்தி வந்தனர்.

இந் நிலையில் கடலூரில் வைத்து தமிழர் விடுதலைப் படை தொண்டர்கள் 6 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். கடலூர்-பாண்டிச்சேரி சாலையில் ஆறுப்பேட்டை என்ற இடத்தில் போலீஸார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு ஆட்டோ சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து ஆட்டோவைநிறுத்திய போலீஸார் அதில் சோதனையிட்டனர். அப்போது ஆட்டோவில் நாட்டு வெடிகுண்டுகள்,வெடிபொருட்கள், துப்பாக்கி ஆகியவை இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஆட்டோவில் இருந்த சரவணன், தமிழவன், ரமேஷ், மணிகண்டன், ஷாருக்கான் உள்ளிட்ட6 பேரைபோலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கடலூர் உப்பளவாடி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். தமிழர்விடுதலைப் படை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர்கள்.

6 பேரிடமும் கடலூர் புதுநகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X