புதிய ரேசன் கார்டு: நாளை முதல் விண்ணப்பம்
சென்னை:
ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.5,000க்கு மேல் வருமானம் உடையவர்களின் ரேசன் கார்டுகளில் குத்தப்பட்ட எச் முத்திரையை தமிழக அரசுஅண்மையில் நீக்கியது.
இந் நிலையில் வருமான வரம்பு ஏதுமின்றி புதிய ரேசன் கார்டு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ரேசன் கார்டுபெற மாதிரி விண்ணப்பப் படிவத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த படிவத்தில் உள்ள விவரங்களை கையால்எழுதியோ, தட்டச்சு செய்தோ ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
குடும்பத் தலைவர் அல்லது குடும்ப தலைவியின் 2 பாஸ்போர்ட் புகைப்படங்களை விண்ணப்பப் படிவத்துடன்இணைைக்க வேண்டும். விண்ணப்பத்தில், எந்தெந்த பொருட்கள் வேண்டும் என்ற விவரத்தைக் குறிப்பிடவேண்டும்.
சமையல் கியாஸ் சிலிண்டர் இருக்கிறதா என்ற விவரத்தையும், இதுவரை ரேசன் கார்டு பெற்றுக் கொள்ளாததற்கானகாரணத்தையும் விளக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சத்துணவு மைய அமைப்பாளரிடமோ அல்லது அங்கன்வாடி அமைப்பாளரிடமோஒப்படைக்க வேண்டும். அவ்வாறு தரும்போது ஒப்புகை சீட்டைப் (acknowldgement) பெற்றுக் கொள்ள வேண்டும்.
குடியிருப்பு முகவரிக்கான ஆதாரம் இருந்தால், அதன் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அதேநேரத்தில் ஆதாரம் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து புதிய ரேசன் கார்டு வழங்கப்படும். ஒப்புகை சீட்டைத் தந்து அந்தந்த பகுதியில்உள்ள ரேசன் கடைகளில் புதிய ரேசன் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications