ஜூலை முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல்: ப.சிதம்பரம்
மும்பை - டெல்லி:
ஜூலை முதல் வாரத்தில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தெரிவித்தார்.
இரண்டு நாள் மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
2004-2005ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் நிறைவேற்றப்படும். இது தொடர்பான தேதிகள் குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் புதிய சபாநாயகருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி:
இந் நிலையில் நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக எம். பி க்கள் இன்று பதவியேற்றனர். நாளை நடைபெறவிருக்கும் சபாநாயகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சோம்நாத் சட்டர்ஜியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்மொழிந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னாள் பிரதமர் அதை வாஜ்பாய் வழிமொழிந்தார்.
சோம்நாத் சட்டஜியை எதிர்த்து யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. எனவே நாளை அவர் போட்டியின்றி சபாநயாகராக தேர்வு செய்யப்படுகிறார்.












Click it and Unblock the Notifications