காங்கிரஸூடன் இணைகிறது காங். ஜனநாயக பேரவை?
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் இணைவது குறித்து வருகிற 5ம் தேதி முக்கிய முடிவை எடுக்கவுள்ளது ப.சிதம்பரம்தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை.
மூப்பனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் ஜனநாயகப்பேரவையைத் தொடங்கினார் ப.சிதம்பரம். சமீப காலமாக அவர் காங்கிரஸூடன் இணைந்து செயல்பட்டுவருகிறார். மேலும் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மத்தியநிதியமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
இந் நிலையில் தனது கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை வருகிற 5ம் தேதி கூட்டியுள்ளார்ப.சிதம்பரம். தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது சில முக்கியமுடிவுகளை ப.சிதம்பரம் அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் பேரவை இணையுமா என்பதும் இந்தக் கூட்டத்தின்போது தெரிய வரும். கூட்டத்தில்பேரவையின் அனைத்துப் பிரிவினரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications