மாநிலங்களவை தேர்தல் ரத்து: எதிர்த்து ஆணையம் மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மாநிலங்களவைத் தேர்தலுக்கு விதித்த இடைக்காலத் தடையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.
மாநிலங்களவைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என அண்மையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நாயார் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி ரூமா பால் மற்றும் நீதிபதி அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநிலங்களவைத் தேர்தலுக்கு நேற்று இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் இன்று ஒரு மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், மாநிலங்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நீதிமன்றம் தலையிடுவது சட்டபடி செல்லாது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications