For Daily Alerts
Just In
பொறியாளர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளைசென்னை:சென்னை தியாகராய நகரில் ஓய்வு பெற்ற மாநகராட்சி பொறியாளரின் வீட்டிலிருந்து 150 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.ராமு என்ற அந்த ஓய்வு பெற்ற பொறியாளர் கோவை சென்றுள்ளார். இவரது மனைவியும், மகளும் வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றனர்.இருவரும் வீடு திரும்பியபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதன் வழியே உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த150 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இது குறித்து பாண்டிபஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை தியாகராய நகரில் ஓய்வு பெற்ற மாநகராட்சி பொறியாளரின் வீட்டிலிருந்து 150 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
ராமு என்ற அந்த ஓய்வு பெற்ற பொறியாளர் கோவை சென்றுள்ளார். இவரது மனைவியும், மகளும் வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றனர்.
இருவரும் வீடு திரும்பியபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதன் வழியே உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த150 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து பாண்டிபஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, June 8, 2004, 5:30 [IST]