பாதுகாப்பு, அரசியல் கமிட்டிகளில் சிதம்பரம், தயாநிதிடெல்லி:மிக முக்கியமான அரசியல் விவகாரக் கமிட்டியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தகவல்-தொடர்புத்துறை அமைச்சர்தயாநிதி மாறனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தக் கமிட்டியில் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி,வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், உணவுத்துறை அமைச்சர் சரத்பவார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.அதே போல நாட்டின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்புக் கமிட்டியில் பிரதமர் தலைமையில் பிரணாப் முகர்ஜி,சிதம்பரம், நட்வர் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மிக முக்கியமான அரசியல் விவகாரக் கமிட்டியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தகவல்-தொடர்புத்துறை அமைச்சர்தயாநிதி மாறனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தக் கமிட்டியில் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி,வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், உணவுத்துறை அமைச்சர் சரத்பவார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல நாட்டின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்புக் கமிட்டியில் பிரதமர் தலைமையில் பிரணாப் முகர்ஜி,சிதம்பரம், நட்வர் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications