நதிகளின் நெட்வொர்க்: நிபுணர் யோசனை!
சென்னை:
தனித்தனியாக முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மாற்றுத் திட்டமாக, நதிகளுக்கு இடையே நெட்வொர்க்ஏற்படுத்தும் திட்டத்தை கங்கா-குமரி தேதிய நீர்ப் பாதைத் திட்டத் தலைவர் ஏ.சி.காமராஜ் முன் வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தற்போது முக்கிய மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து பேசப்படுகிறது. ஆனால்இதற்கு கால அவகாசம் அதிகம் தேவைப்படும், செலவும் மிக அதிகம், இதனால் ஏராளமான இழப்புகளும்ஏற்படும்.
எனவே இதற்கு மாற்றாக நதிகள் பிணைப்புத் திட்டம் அதாவது நதிகளை நெட்வொர்க்கிங் செய்வது, என்ற மாற்றுத்திட்டத்தை பரிந்துரைத்துள்ளோம்.
இத் திட்டத்தை மத்திய நீர் வளத்துறை பரிசீலித்து வருகிறது.
இதன்படி, நதிகள் அனைத்தும் இணைக்கப்படாது. மாறாக, இமயலை நீர் வழிப் பாதை, மத்திய நீர் வழிப்பாதை,தென்னக நீர் வழிப் பாதை என ஆங்காங்கே நதிகள் பிணைக்கப்பட்டு நெட்வொர்க் ஏற்படுத்தப்படும்.
இந்த நீர் வழிப் பாதை மொத்தம் 15,000 கிலோமீட்டர் தொலைவைக் கொண்டதாக இருக்கும்.
இத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு மட்டும் 750 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். தென் மாநிலங்களுக்குமொத்தம் 1500 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
கடலில் வீணாக தண்ணீர் கலப்பது தடுக்கப்படும், செலவும் குறைவு. மேலும் பல்லாயிரம் வாட் மின்சாரத்தையும்தயாரிக்க முடியும்.
இத் திட்டம் குறித்த விரிவான ஆய்வுக்கு ரூ. 20 கோடி நிதி தேவைப்படுகிறது என்றார் காமராஜ்.












Click it and Unblock the Notifications