தமிழகத்தில் பாடப் புத்தகங்களுக்கு செயற்கை தட்டுப்பாடு !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பள்ளிப் பாடப் புத்தகங்களுக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையை உயர்த்தி, வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.

இதையடுத்து பள்ளிகள் மூலமே புத்தகங்களை சப்ளை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தக் கல்வியாண்டு தொடங்கி பள்ளிகள் திறந்துவிட்ட நிலையில் பல பாடப் புத்தகங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தேவையான அளவு புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் அச்சிட்டு விற்பனைக்கு விட்டாலும், அவற்றை வியாபாரிகள் பத்து வைத்து வருகின்றனர்.

இதனால் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பாடப் புத்தகங்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி கொள்ளையடித்து வருகின்றனர் பல புத்தக வியாபாரிகள்.

மேலும் புத்தகம் வேண்டுமானால், ரப்பரில் ஆரம்பித்து ஸ்கேல், ஜியாமென்டரி பாக்ஸ், நோட்ஸ் ஆகியவற்றையும் வாங்க வேண்டும் என்று பல கடைகளில் கட்டாயப்படுத்துகின்றனர்.

இத்தனைக்கும் இந்த புத்தகக் கடைகள் அரசு அங்கீகாரம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்களிடம் தான் புத்தகம் வாங்கியாக வேண்டிய நிலையில் பெற்றோர்களும் மாணவர்களும் உள்ளனர்.

புத்தகங்களுக்கு அரசு இந்தக் கடைக்காரர்களுக்கு 9 சதவீதம் வரை கமிஷன் தருகிறது. ஆனாலும், பதுக்கி வைத்து, செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, 25 முதல் 40 சதவீதம் வரை விலையை உயர்த்தி கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர் பல வியாபாரிகள்.

இதையடுத்து பள்ளிகளுக்கே புத்தகங்களை அனுப்பி மாணவர்களுக்கு விற்கும் முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர். மேலும் தட்டுப்பாட்டை உருவாக்கி, லாபம் அடிக்கும் கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+