பள்ளிக் காவலாளியைத் தாக்கி ரூ. 1லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பள்ளி மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் தாக்குதலில் பள்ளி காவலாளி காயமடைந்தார்.
கோவிலூர் என்ற இடத்தில் அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் பணம் பள்ளியிலேயே வைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேற்றிரவு பள்ளிக்கு வந்த சில கொள்ளையர்கள் காவலாளி கருப்பையாவைத் தாக்கிவிட்டு அங்க்ருந்த பீரோவை உடைத்து ரூ. 1 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
தாக்குதலில் காயமடைந்த காவலாளி கருப்பையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications