செளதி தமிழர்களை காக்க பிரதமருக்கு தேசிய லீக் கட்சி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

செளதி அரேபியாவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து நேராமல் காக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தேசிய லீக் கட்சியின் தமிழக பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஹாஜா நிஜாமுதீன், சிங்குக்கு அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில், செளதி அரேபியாவின் அல் கோபர் நகரில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இவர்களில் 17 பேர் பின்னர் கொல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் இந்தியர்கள்.

இதனால் செளதி அரேபியாவில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். எனவே அவர்களது உயிர்களுக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் நிஜாமுதீன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+