தமிழகத்தில் 10 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்க திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 10 லட்சம் ரேசன் கார்டுகள் வழங்கப்படவுள்ளன.

மாநிலத்தில் இப்போது 1.62 குடும்பங்கள் ரேசன் கார்டுகள் வைத்துள்ளன. சில ஆண்டுகளாக கார்டுகள் வழங்கப்படவில்லை.

இந் நிலையில் மாத வருமானம் ரூ. 5,000 இருப்பவர்களுக்கு எச் முத்திரையைக் குத்தி ரேசன் கடையில் எந்தப் பொருளும் வாங்க முடியாத நிலைக்கு மாநில அரசு தள்ளியது. இதனால் 18.5 லட்சம் கார்டுகள் கெளரவ ரேசன் கார்டுகளாக மாறின. இதை வைத்து ஒரு பொருளும் ரேசனில் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

தேர்தல் தோல்வியையடுத்து இந்த எச் முத்திரையை வாபஸ் பெற்ற தமிழக அரசு புதிய ரேசன் கார்டுகள் வழங்கவும் முன் வந்தது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் கார்டுகள் கோரி விண்ணப்பித்தவண்ணம் உள்ளனர்.

கடந்த 1ம் தேதி தொடங்கிய இந்த விண்ணப்பங்கள் வாங்கும் பணி 30ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 4 லட்சம் பேர் விண்ணப்பங்கள் தந்துவிட்ட நிலையில், மாத இறுதியில் மொத்தம் 12 லட்சம் வரை விண்ணப்பங்கள் வந்துவிடும் என்று கருதப்படுகிறது.

இதில் 10 லட்சம் பேருக்கு ரேசன் கார்டுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணி ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்.

புதிதாக 10 லட்சம் கார்டுகள் சேர்க்கப்படுவதால் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவை மாதம் 1.8 லட்சம் டன்னில் இருந்து 1.33 லட்சம் டன்னாக உயர்த்தவுள்ளது தமிழக அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+