தமிழகத்தில் ரயில்களில் மண் குவளைக்கு வரவேற்பில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரயில்களில் முதல் வகுப்புப் பெட்டிகளில் உள்ளதைப் போல இரண்டாம் வகுப்புப் பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் செய்து கொள்ள பிளக் பாயிண்ட் வசதிகள் செய்து தரப்படும் என ரயில்வே துறை இணையமைச்சர் வேலு தெரிவித்தார்.
இன்று சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐ.பி.எப்) ஆய்வு மேற்கொண்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த ஆண்டு 1,170 பெட்டிகளை ஐ.பி.எப் தயாரிக்கவுள்ளது. மலேசிய ரயில்வேக்கு ரூ. 3.6 கோடி செலவில் 11 பெட்டிகள் செய்து தர ஆர்டர் கிடைத்துள்ளது.
ரயில்களில் மண் குவளையில் காபி, டீ வழங்கும் திட்டத்துக்கு வட மாநிலங்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தென் மாநிலங்களில் அதற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. பிளாஸ்டிக் கப்களைத் தான் தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மக்கள் விரும்புகிறார்கள் என்றார் வேலு.












Click it and Unblock the Notifications