For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ரூ. 200 கோடியில் 4 புதிய பாலங்கள்: பாலு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் ரூ. 200 கோடியில் 4 புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இடங்களை இன்று டி.ஆர்.பாலு பார்வையிட்டு போக்குவரத்து நெருக்கடி குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க புதிதாக 4 மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 200 கோடி மதிப்பில் ஓராண்டில் இவை கட்டி டிக்கப்படும்.

மீனம்பாக்கம், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, கோயம்பேடு அம்பேத்கர் சிலை மற்றும் பாடி ஆகிய இடங்களில் இந்த மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன.

இதற்கு மத்திய அரசுடன், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் பாலு.

அவருடன் தாம்பரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், வில்லிவாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்டோரும் சென்றனர்.

பக்கிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து:

இதற்கிடையே பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தப்படுத்தி படகு போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முட்டுக்காட்டில் இருந்து மரக்காணம் வரையிலான 20 கி.மீ. தூரத்தை முதலில் சுத்தம் செய்ய பொதுப் பணித்துறை முடிவு செய்துள்ளது.

170 கிமீ தூரம் கொண்ட இந்த கால்வாயில் 1950ம் ஆண்டு வரை படகுப் போக்குவரத்து நடந்து வந்தது. ஆனால், இது பின்னாலும் மாபெரும் சாக்கடைக் கால்வாயாக மாறிவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X