For Daily Alerts
Just In
கன்னியாகுமரியில் வெடிகுண்டுகள், சூலாயுதங்களுடன் மீனவர்கள் பயங்கர மோதல்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை என்ற இடத்தில் இரு பிரிவு மீனவர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமன்துறை மீனவர் கிராமமாகும். இந்த கிராமத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
சாதாரண வாக்குவாதமாகத் தொடங்கி பெரும் கலவரமாக மாறிய இந்த மோதலில் ஒரு தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் நாட்டு வெடிகுண்டுகள், சூலாயுதங்கள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. இந்த பயங்கரத் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் குமரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த கிராமத்தில் ஆயுதம் தாங்கிய ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, June 14, 2004, 5:30 [IST]