சென்னையில் 2 பெரும் தீ விபத்துகள்: ரூ. 70 லட்சம் நாசம்
சென்னை:
சென்னை நகரில் இன்று ஏற்பட்ட இரண்டு பெரும் தீ விபத்துக்களில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னை பாரிமுனை தம்புச்செட்டித் தெரு பகுதியில் சவாணி லாரி சர்வீஸ் என்ற சரக்குப் போக்குவரத்து நிறுவனம் உள்ளது. இங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதில் நிறுவனத்திற்கு வெளியூர்களிலிருந்து வந்திருந்த பார்சல்கள், வெளியூருக்கு அனுப்பப்படவிருந்த பார்சல்கள் பற்றி எரிந்தன.
கொளுந்து விட்டு எரியத் தொடங்கிய தீயைக் கட்டுப்படுத்த 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து வந்தன. பார்சல்களில் ஹைட்ரஜன் பெராக்சைட் என்ற வேதிப் பொருளும் இருந்ததால், தீ மிக பயங்கரமாக எரிந்தது.
அதை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த விபத்தில் ரூ. 65 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாகத் தெரிகிறது.
இதேபோல, பெரியமேடு பகுதியில் உள்ள வேதிப் பொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் தோல் பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம்.












Click it and Unblock the Notifications