விவேக்கை விடாமல் துரத்தும் கரப்பான் பூச்சி!
சென்னை:
மிரிண்டா விளம்பரத்தில் நடித்ததோடு சரி, அதில் கரப்பான் பூச்சி வந்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது என நடிகர் விவேக் கூறியுள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சென்னையில் மிரிண்டா குளிர்பானத்தை வாங்கிய 2 வழக்கறிஞர்கள் அதில் கரப்பான் பூச்சி செத்த நிலையில் மிதந்ததைக் கண்டு அதிர்ந்தனர். உடனே நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
வழக்கில் மிரிண்டா குளிர்பான விளம்பரத்தில் நடித்த விவேக்கையும் ஒரு குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இந் நிலையில் மிரிண்டா விளம்பரத்தில் நடித்ததோடு எனது பங்கு முடிந்து விட்டது. அதில் கரப்பான் பூச்சி மிதந்ததற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும், கரப்பான் பூச்சி மிதந்த மிராண்டா போலியாக யாராவது தயாரித்ததாக இருக்கலாம் என்று விவேக் கூறியுள்ளார்.
இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவேக்கின் கருத்து சரியல்ல. மிரிண்டா குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளதன் மூலம் இந்தப் பிரச்சினையில் விவேக்குக்கும் தார்மீக பொறுப்பு இருக்கிறது.
ஒரு குளிர்பானத்தை பிரபலப்படுத்தும் ஒருவர், அதைக் குடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு பதில் சொல்லியாக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அவர் தப்பக் கூடாது.
எனவே இந்தப் பிரச்சினையில் விவேக் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ளார்.
கோக், பெப்சி போன்ற பானங்களில் நச்சுத் தன்மை உள்ளதாக ஆய்வுகள் கூறி வரும் நிலையில், அந்த வெளிநாட்டு பானங்களை பிரபலப்படுத்தும் முயற்சியில், நடிகர், நடிகைகள் ஈடுபடுவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறியுள்ளார் வெள்ளையன்.
மிரிண்டாவில் கரப்பான் பூச்சி!: நடிகர் விவேக் மீது வழக்கு!!












Click it and Unblock the Notifications