பெயர் நீக்கம்: 20,645 வாக்காளர்கள் புகார் மனு
சென்னை:
தமிழக வாக்காளர் பட்டியலிலிருந்து லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் இன்று திருவள்ளூரில் விசாரணை மேற்கொண்டார்.கன்னியாகுமரியில் தொடங்கி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடத்தி விட்டு இன்று சென்னை வந்த அவரிடம் இதுவரை 20,654 பேர் தங்களது பெயரும் குடும்பத்தினரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
திருவள்ளூரில் ஆய்வு நடத்திய பின் சென்னை திரும்பும் தாமஸ், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கியுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை சென்னையில் அவர் விசாரணை மேற்கொள்கிறார்.
இந் நிலையில், வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது மாநில அரசு ஊழியர்கள் என்று புகார் கொடுத்துள்ள அதிமுக, தாமஸை நேரில் சந்தித்துப் பேசவும் அனுமதி கோரியுள்ளது. இதையடுத்து நாளை அவர் அதிமுக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications